மாணவ – மாணவியருக்கு கல்வி உபகரணம் வழங்கல் 

காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியருக்கு கல்வி உபகரணங்களை, அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

காஞ்சிபுரம் அடுத்த களியனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

களியனுார், முத்தியால்பேட்டை, ஏரிவாய், வள்ளுவப்பாக்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவ – மாணவியருக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினர்.

Advertisement