சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.85.87 லட்சம், 37 கிராம் தங்கம்
கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக, 85.87 லட்சம் ரூபாய், 37 கிராம் தங்கம், 3.617 கிலோ வெள்ளி வசூலானது.
திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில், பிரசித்திபெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இரு மாதங்களுக்கு பின், நேற்று கோவில் பிரகாரத்தில், உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.
ஹிந்து சமய அறநிலைய துறையின், திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம், பெரியபாளையம் துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில், ஊழியர்கள், பக்தர்கள் கொண்ட குழுவினர், காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
எண்ணிக்கையின் முடிவில், 85 லட்சத்து 87,141 ரூபாய், 37 கிராம் தங்கம், 3.617 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிந்தது.
அவற்றை கணக் கிட்ட பின், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகி கள் வங்கியில் ஒப்படைத்தனர்.
மேலும்
-
புதுச்சேரி கிராம வாங்கி சர்வதேச யோகா தினம்
-
புதுச்சேரியில் தேசிய பாரம்பரிய நடன விழா பாரம்பரிய கலைகள் சங்கமத்தால் உற்சாகம்
-
வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
-
இலவச மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
-
நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுமா?: 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
-
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்