பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு த.வெ.க., நிவாரண உதவி

ஆத்துார்; ஆத்துார் நகராட்சி, 31வது வார்டு, அம்பேத்கர் நகரை சேர்ந், கூலித் தொழிலாளி சதீஷ், திவ்யா தம்பதியர், வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அங்கு நேற்று முன்தினம் மதியம், 2:15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டு, துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.


இதனால், த.வெ.க.,வின் ஆத்துார் நகர செயலர் நாகராஜ் தலைமையில் கட்சியினர், பாதிக்கப்-பட்ட தம்பதியருக்கு காஸ் அடுப்பு, பாய், தலை-யணை, துணிகள் உள்பட, 5,000 ரூபாய்க்கு நிவா-ரண உதவிகளை வழங்கினர்.

Advertisement