அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது; 5 பேர் பரிதாப பலி

6


குவஹாத்தி: அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியில் இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் தீப்பற்றி வெடித்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று (ஜூன் 13) காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரவுரியா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான அந்த விமானம், ஏஎன்32 ரகத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விமானத்தில் முதலில் திடீரென தீப்பற்றியதால் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த துணை விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement