6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி
புதுடில்லி: டில்லியில் இருந்து இன்று (ஜூன் 13) பிரதமர் மோடி 6 நாட்கள் வெளிநாட்டு பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாட்டுக்கு இன்று புறப்பட்டு சென்றார். இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அடுத்த சில நாட்களில், இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்தியப் புலம்பெயர்ந்தோருடனான கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டுள்ளேன்.
இந்தப் பயணம் நைஸ் நகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் தொடங்கும். குறிப்பாக, 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியில் அதிபர் மேக்ரான் கலந்துகொள்வார். இந்தியாவும் பிரான்சும் 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டை'க் கொண்டாடுவதால், 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
நைஸ் நகரில், அதிபர் மேக்ரானுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன்.ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் எவியான் நகரில் இருப்பேன். அங்கு நான் பல்வேறு உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவேன். நான் வரும் 18ம் தேதி பாரிஸில் இருப்பேன்.
அங்கு, அதிபர் மேக்ரானுடன் இணைந்து விவாடெக் 2026 மாநாட்டில் கலந்துகொள்வேன். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான ஐரோப்பாவின் முக்கியக் கூட்டங்களில் ஒன்றில் கலந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நாளில், பிரான்சில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜூன் 18ம் தேதி இரவு மீண்டும் டில்லிக்கு பிரதமர் மோடி திரும்புகிறார்.
Thirutuu models does not have knowledge to understand the importance as they never crossed gummidipoondi
ஒவ்வரு பிரதமரின் பயணமும் மிக சிறந்த ஆயுதங்களை வாங்கவும், இந்திய ராணுவ ஆயுதங்களை விற்கவும், ராணுவ ஆயுத உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்யவும் நடக்கிறது. இது தவிர பிரான்ஸ் உடன் ரபேல் ஒப்பந்தம், மற்றும் இந்திய பொருட்களுக்கு மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பா இருக்கிறது. ஐரோப்பிய இரு தரப்பு ஒப்பந்தத்திற்கு அடுத்து, பல பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரிய வாய்ப்பு உள்ளது.
உதாரணத்திற்கு பிரதமரின் இந்தோனேஷியா, வியட்நாம் பயணத்திற்கு பின்னால் இப்போது அந்த நாடுகளுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் முடிவு நிலையில் உள்ளது. ஒவ்வரு பிரதமரின் பயணமும் மிக சிக்கனமாகவும், குறைந்த நாட்களுக்கும் திட்டமிடப்படுகிறது. இரவில் பயணம் செய்து, பகலில் பேச்சவார்த்தை என்ற முறையில் நடக்கிறது.
2014 வரை புள்ளி கூட்டணி பிரதமர்கள் செய்த பயண அநியாயங்களை இங்கே எழுத முடியாது. குடும்பத்துடனும், நண்பர்களுடன் கூத்து பல ஆயிரம் கோடி செலவு என்ற முறையில் இருந்தது.
உதாரணமாக கான் கிராஸ் ஆட்சியில் போயிங் நிறுவனத்தில் இருந்து 1300 கோடி ரூபாய்க்கு 25 ஆண்டுகளுக்கு விமானம் வாங்கி 5 வருடத்தில் வெறும் 427 கோடி ரூபாய்க்கு எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு விற்ற கதை எல்லாம் எங்கே எழுதுவது. போலி திராவிடனே கண்விழி. மஞ்சள் காமாலை கண்ணுடன் பார்க்காதே.
பெட்ரோல் செலவை குறைக்க ஜீ ஷேர் ஆட்டோவில் தான் பிரான்சு நாட்டுக்கு போகிறார்
அப்போ உமது வீட்ல.இன்னும் சோறு.பொங்கலையோ...
சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க
பெரும் கார்பொரேட்களுக்கு பணமா கொட்டும் இங்கே இருக்கும் சில வெறி பிடித்தவர்கள் சில்லறைகளை சிதற விடுவார்
ம்ஹூம்
சிங்கம் கிளம்பிடிச்சு!
காசை சேமித்து உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம்
உத்தர பிரதேச குஜராத் மாநில தேர்தல் அடுத்த வருடம் தான் அதனால் அது வரை
கோகுல அதுவரை.பட்டினி.கிடப்பாரோ..
சிக்கனமா ஓட்டி பெட்ராலை சேமிக்கணும் மக்களே..
விமாடம் பறப்பது ஓடுவது பெட்ரோலுனால் அல்ல. ஹை ஸபீட் கெரோசீனால் என்பது தங்களுக்கு தெரியாத்து அல்ல. பெட்ரோல் டீசல்தீன் சேமிக்கப் படவேண்டும்
ஹைய்யோ நம்ம jss எவ்ளோ ஷார்ப்... பெட்ரோல் டீசல் தான் கச்சா எண்ணெய்ல இருந்து வருது... ATF நம்ம தோட்டத்து கெனறுல இருந்து வருதுன்னு புரிவச்சிட்டாப்ல...
உள்நாட்டு பிரச்சனைகளை மக்கள் தாங்களே தீர்த்து கொள்வார்கள். பிரதமர் உலகின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க உலகம் முழுவதும் பயணம் செய்வார்.
இவர் உலகம் முழுதும் சென்று உறவைப் பேணுவதால் அவசர காலத்தில் உதவி கிடைக்கிறது.உக்ரைன் சிரியா ஏமன் லிபியா ஈரான் என போர் நடக்கும் நாடுகளில் நம்ம ஊர் மக்கள் மாட்டாமல் எப்படி வெளியே வந்தார்கள்? இவர் சுற்றுவதால் தான்.பிரதமராக இருந்தால் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தான் ஆக வேண்டும். மன் மோகன் சிங் அவர்கள் எவ்வளவு பயணம் செய்தார் என்று பாருங்கள்.
உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்து வைக்க உள்துறை மந்திரி இருக்கிறார் அவர் பெயர் திரு அமித்ஷா. பிரதமர் பங்கேற்பது உலகத்தலைவர்கள மாநாடு. அதில் பங்கற்க் மோடிதான் செல்லவேண்டும். ஸடாலினையோ உதயநிதியோ அல்லது ,சோசப் விஜயோ போகமுடியாது
அப்பிடின்னா ஜெய்சங்கர் வெறும் மிக்ஸர் சாப்புட தானா jss ஸாரே
மன்மோகனோட மொத்த பத்து வருஷ ரெக்கார்ட்ஸ் நம்ம அம்பத்தாறு வந்த ஒரு வருடத்தில் தாண்டினது புது பகோடாக்கு தெர்ல போல... இப்ப போட்டி போடுறது எமிரேட்ஸ்ல இருக்கும் மோஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்ட் பைலட் மற்றும் க்ரூஸ் கூட தான்மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு