பட்டா மாறுதலுக்கு மனு வழங்கினால் 15 நாளில் நடவடிக்கை; செங்கோட்டையன் அறிவிப்பு

24


சென்னை: பட்டாக்களுக்கு மனு வழங்கினால் 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பட்டா மாறுதல் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார். பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: பட்டாக்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது என்பதை தவிர்க்கும் வகையில் விரைந்து வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது.
அதற்கான நடவடிக்கை விரைந்து செய்வதற்காக துறையின் சார்பாக பல்வேறு ஆலோசனை நடைபெற்று இருக்கிறது. துறையின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து பேசிய பிறகு அந்த பணிகளை நாம் விரைந்து மேற்கொள்ள இருக்கிறோம். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Advertisement