விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரம் வடிவேல்கரை கிராமத்தில் ‘விளை நிலம் காப்போம்’ விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மதுரை வேளாண் இணை இயக்குனர் முருகேசன் தலைமை வகித்தார்.‌ திருப்பரங்குன்றம் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் அருள் நவமணி விஜய பாரதி, முன்னோடி இயற்கை விவசாயி அன்னவயல் காளிமுத்து ஆகியோர் மண்வளம், மண் பரிசோதனையின் அடிப்படையில் சரிவிகித உரமிடல், இயற்கை வேளாண்மை, ஆரோக்கிய வாழ்வுக்கான உணவு முறைகள், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் அளித்தனர். அட்மா தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஏற்பாடுகள் செய்தனர்.

Advertisement