முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: வீட்டிலிருந்து வெளியில் சென்ற முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த சிந்தாமணியைச் சேர்ந்தவர் அய்யனார், 53; புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement