பொங்கல் திருவிழா

பேரையூர்: பாப்பையாபுரம் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். இந்தாண்டு கடந்த மூன்று நாட்களாக பொங்கல் திருவிழா நடந்தது. இதில் கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் ஒரு வாரமாக விரதம் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Advertisement