தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், போலீஸ் டி.எஸ்.பி., பாஸ்கர், அன்னூர் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் நேற்று மாலை அன்னூர் பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்களில் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் தனியார் பஸ்களில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 15 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏர்ஹாரன் பயன்படுத்திய பஸ் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

-----

Advertisement