'செலவு பண்ண வழியில்லையோ?'
திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், சமீபத்தில் நடந்தது.
இதில் மாவட்டச் செயலர் சிவசாமி பேசுகையில், 'தேர்தல் தோல்வி நிரந்தரமானது அல்ல. 1996 சட்டசபை தேர்தலில் நான் தோற்றேன்; அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றேன். 2001 சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ., ஆனேன். இப்படி, அடுத்தடுத்த தேர்தல்களில் பதவி வரும்.
'அ.தி.மு.க.,வின் தற்போதைய தோல்வியும் அப்படித்தான்; நிரந்தரமானது அல்ல. அப்போதெல்லாம், அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தாலும், சொந்த காசை செலவு பண்ணியே கட்சியை வளர்த்தோம்' என்றார்.
இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'எதிர்க்கட்சியா இருந்தப்ப, மாவட்டச் செயலரா இருந்து செலவு செஞ்சேன். ஆளும் கட்சியானதும் என்னை ஓரம் கட்டிட்டாங்க. 15 வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் மாவட்டச் செயலர் ஆனாலும், செலவு பண்ண வழியில்லன்னு மறைமுகமா சொல்றாரோ' எனக் கூற, சக நிர்வாகிகள் ஆமோதித்து சிரித்தனர்.
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு