ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே தர வேண்டும்: பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவு
சென்னை: 'பெட்ரோல் பங்க்குகளில், ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு, ஒரு நாளில் 200 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது' என, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. பல நாடுகளில் எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டு வருவதுடன், அவற்றை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
நம் நாட்டில் மானிய விலையில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசலை விற்பதால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்கிறது. இருப்பினும், சிலர் பீதி காரணமாக பெட்ரோல், டீசலை அதிகளவில் வாங்கி, இருப்பு வைத்து வருகின்றனர்.
இதை தடுக்கும் வகையில், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வினியோகத்தை ஒழுங்கு படுத்த, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தொழில் துறையினர்,தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இதன்படி, மொத்த வாடிக்கையாளர்கள் பெட்ரோல், டீசலை, பங்க்குகளில் இருந்து வாங்கக்கூடாது. அவர்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க வேண்டும். பெட்ரோல் பங்க்குகளில் டீசலை, வாகனங்களில் மட்டுமே நிரப்ப வேண்டும் .
ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒரு வாகனத்துக்கு, ஒரு நாளில் 200 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது. அந்த டீசலை மறு விற்பனை செய்யக்கூடாது.
இந்த கட்டுப்பாடுகளை பெட்ரோல் பங்க்குகள் கடைப்பிடிப்பதை, எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனை தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள், எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
@block_Y@தொழில் துறை முடங்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை
பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவு குறித்து நிபுணர்கள் கூறியதாவது: அரசு, தனியார் மருத்துவ மனைகளில் மின்சாரத்துக்கு மாற்றாக ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான டீசல், அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில் இருந்து லாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்தச் சூழலில், மொத்த டீசல் கொள்முதல் இனி பெட்ரோலிய நிறுவனங்கள் வாயிலாக நடக்க வேண்டும் என மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்திருப்பதால், அவசர தேவைக்கு உடனடியாக டீசல் வாங்க முடியாத சூழல் மருத்துவமனைகளுக்கு ஏற்படும்.
இதனால், முக்கியமான அறுவை சிகிச்சை சமயங்களில், டீசல் இல்லாமல் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனால், பெரும் விபரீதம் ஏற்படலாம். மருத்துவ துறை கட்டமைப்புகளான அவசர சிகிச்சை மையங்கள், முழு உடல் பரிசோதனை மையங்கள், ரத்த வங்கிகள், பார்மாசூட்டிகல் போன்ற துறைகளுக்கும் இக்கட்டான சூழல் ஏற்படும்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீரேற்றும் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நகராட்சி, மாநகராட்சி உள்கட்டமைப்புகளின் அன்றாட பணிகள் ஸ்தம்பிக்கும்.
கட்டுமான உபகரணங்கள், சுரங்க இயந்திரங்கள், சாலை அமைக்க உதவும் உபகரணங்கள், தொழிற்சாலை ஜெனரேட்டர்கள், நீர்ப்பாசன கருவிகள் போன்ற ராட்சத வடிவிலான இயந்திரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்த்தி செல்ல முடியாது. குறிப்பாக கட்டுமானம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறைகளின் நடவடிக்கைகள் அடியோடு முடங்கலாம். இவ்வாறு எச்சரித்துள்ளனர்.block_Y
வாசகர் கருத்து (5)
Mahendran Puru - Madurai,இந்தியா
17 ஜூன்,2026 - 04:27 Report Abuse
நம் நாட்டில் ஊருக்குத்தான் உபதேசம். பிரதமர், மத்திய மாநில அமைச்சர்களுக்கு அல்ல.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் கேஸ் விலை குறையுமா? 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 ஜூன்,2026 - 13:05 Report Abuse
இந்த உத்தரவு பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல், சும்மா ஊரூரா சுற்றித்திரியும் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என்று வொவொருவருக்கும் செயல்படுத்தவேண்டும். அதுவும் அவர்களுக்கு பாதுகாப்பு என்று கூறி ஒரு டஜன் கார்கள் அவர்கள் முன்னாடியும், பின்னாடியும் செல்லும். அங்கே பெட்ரோல் விரயமாவதில்லையா? பெட்ரோலிய அமைச்சகம், சிந்தித்து ஒரு முடிவு எடுக்கவும், உத்தரவு பிறப்பிக்கவும். 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
13 ஜூன்,2026 - 10:11 Report Abuse
முதலில் சட்டசபை ராஜ்ய சபா மாநில எம் எல் ஏக்களை, எம் பிக்கள் அனைவருக்கும் ஒரு கட்டளை இடுங்கள், அவர்கள் இஷ்டப்படி பயணம் செய்வதற்கு ஒரு கட்டுப்பாடு விதியுங்கள், இலவசம் என்பதால் வரைமீறக்கூடாது. கோடி கோடியாக அவர்களுக்காக மக்கள் வரிப்பணம் செலவாவதை கண்டிப்பாக குறைக்கவேண்டும். 0
0
Reply
Senthil Raja - ,இந்தியா
13 ஜூன்,2026 - 07:51 Report Abuse
இந்தியா மானிய விலை என்பது ஆடி தள்ளுபடி போன்று தவறான ஒன்று, நம்ம நாட்டின் பெட்ரோல் உற்பத்தி செலவுடன் கணக்கிட்டால் 55-60 மேல் ஆகாது நான் சொல்வது , 1$= 95 , ஆயில் = 100 டாலர்.
இதில் உற்பத்தி ஆலைகளின் லாபம் அடங்கும்.
ஆனால் தவறான மானிய விலை என்பதற்கு ஆதாரம் இல்லை .
இரண்டு ஆண்டு மேலாக 40 டாலர் , என்ற விலையில் லாபம் , ஆனால் 100 நாட்கள் நடைபெரும் விலை ஏற்றம் என்பது , அரசாங்கம் மக்களின் எந்த அளவுக்கு உறிஞ்சுகிறது சிறந்த உதாரணம் .
பெரு நிர்வங்களுடன் மட்டும் தொடருப்பில் இருப்பதால் , சாதரண மக்களின் கஷ்டத்தை உதாசீனம் செய்யும் முறை சரி அல்ல ,
பெரு நிர்வங்களுடன் நண்பராக இருக்காமல் , சாதாரண மக்களின் நண்பனாக இருக்க முயற்சி செய்யுங்கள் . 0
0
Reply
Subbiah Karthikeyan - ,
13 ஜூன்,2026 - 03:32 Report Abuse
நிபுணர்கள் கருத்து என்று எதையாவது ஆதாரம் இன்றி பதிவு செய்ய வேண்டாம். காசுக்காக இந்த பதிவு என்பது வெளிச்சம். கடந்த சில நாட்களாக அரசை குறை சொல்வதே தங்களின் ₹200 வேலை. 0
0
Reply
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement