கார் டயர் பஞ்சராகி விபத்து பேசின்பாலத்தில் வாகன நெரிசல்

வியாசர்பாடி: கார் டயர் பஞ்சராகி இரும்பு தடுப்பில் மோதியதால், பேசின்பாலம் அருகே, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஏக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தன், 40. காரில் வியாசர்பாடியில் இருந்து மின்ட் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தார்.

வழியில், பேசின்பாலம் அருகே டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த கார், இரும்பு தடுப்பில் மோதியது. இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது; யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News


புளியந்தோப்பு போலீசார், மீட்பு வாகனம் மூலம் காரை அகற்றினர். இதனால், வியாசர்பாடி பாலம் முதல் பேசின்பாலம் வரை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நிலவியது; வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Advertisement