மொபைல் போன் திருடிய மூவர் கைது

சத்தியமங்கலம்; கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜன், 70; திருப்பூர் செல்-வதற்காக சத்தி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை காத்திருந்தார்.


அப்போது குடிபோதையில் வந்த மூன்று பேர், கோவிந்தராஜனிடம் பீடி வாங்கிவிட்டு அவர் வைத்திருந்த, மொபைல்போனை பறித்து ஓடினர். முதியவர் புகாரை தொடர்ந்து, கடம்பூர் போலீசார் சிசிடிவி கேமரா பதிவை வைத்து தேடினர். இதில் மொபைலை பறித்து சென்ற புதுக்கோட்டை பாலமுருகன், 26, சிவகாசி வெள்ளையன், 35, சிவகங்கை ஜீவானந்தம், 48, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement