49 ஆடுகள் பலியால் தெருநாய்களுக்கு ஊசி

தாராபுரம்; தாராபுரத்தை அடுத்த சின்னப்புத்துாரில், இரு தினங்களுக்கு முன் பட்டிக்குள் புகுந்து தெரு-நாய்கள் கடித்து குதறியதில், 49 ஆடுகள் பலியா-னது. இதன் எதிரொலியாக தாராபுரம் பகுதியில் தெருவில் சுற்று நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய கோரிக்கை எழுந்தது.

இதை தொடர்ந்து தாராபுரம் நகரில், நேற்று பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த, 78 நாய்களை, நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். கால்நடை மருத்துவர்கள் தடுப்பூசி போட்டனர். மேலும், 10 நாய்களுக்கு, மருத்துவர் ஜெயராம் மூலம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement