பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறக்க என்ன செய்ய வேண்டும்?: எழுதுங்கள் வாசகர்களே...!
- நமது நிருபர்-
ஒடிசாவில் பள்ளி முதல் கல்லுாரி வரை அரசு கல்வி நிலையங்களில் இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, உ.பி., ம.பி., போன்ற மாநிலங்களில் ஆன்மிக பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியில் இருக்கிறது. நமது கலாசாரம், பண்பாட்டை பாதுகாப்பதாகவும், அவற்றை அடுத்து வரும் தலைமுறைக்கு கற்றுத்தரும் வகையிலும் இல்லை.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக பாடத்திட்டத்தில் ‛‛நீதி போதனை'' வகுப்புகள் நடத்தப்பட்டன. வாரம் 2 அல்லது 3 வகுப்புகள் அறநெறிகளை போதிப்பதற்காக நடத்தப்பட்டன. காலப்போக்கில் மற்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், இந்த நீதிபோதனைக்கு ‛‛குட்பை'' சொல்லிவிட்டனர்.
அதில் இருந்தே மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை மதிக்க வேண்டும், பெற்றோர்களை வணங்க வேண்டும் போன்ற அறநெறிகள் அற்றுப் போய்விட்டன. நமது பள்ளிகள் ‛‛மெக்கானிக்கலாகவும்'', பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் செயல்படத் துவங்கின.
இந்த சூழ்நிலையில் படிக்கும் மாணவர்களும், ‛‛பணம் பண்ணுவது தான் வாழ்க்கை'' என்று நினைக்க ஆரம்பித்தனர். இதனால் பொது இடங்களில் நாகரீகமாக நடக்க வேண்டும்; சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்; அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை துன்புறுத்தக் கூடாது; பெண்களை மதிக்க வேண்டும்; அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நீட்டக் கூடாது; தான தர்மங்கள் வழங்க வேண்டும்.
பெற்றோர், வயதில் மூத்தோர், ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்; உழைத்து வாழ வேண்டும்; அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது; லஞ்சம் தரக் கூடாது; ஊழல் செய்யக் கூடாது போன்ற விஷயங்கள் கற்றுதரப்படாமல் போய்விட்டன.
எனவே, புதிய அரசாவது பள்ளி பாடத்திட்டங்களில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகளை துவக்க வேண்டும். ஆன்மிக விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். அனைத்து மதங்களில் சொல்லப்பட்ட நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பகவான் ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையால் நடத்தப்படும் ‛‛பாலவிகாஸ்'' பள்ளிகளில் இருப்பது போல் அறநெறியுடன் கூடிய பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
மாணவர்களின் கவனம் சமூக விரோத நடவடிக்கைகளில் செல்வதைத் தவிர்க்க விளையாட்டுகளை கட்டாயமாக்க வேண்டும். மனதை கட்டுக்குள் வைக்க யோகா வகுப்புகளை நடத்த வேண்டும்.
கடந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒவ்வொரு முறையும் லைசென்சை புதுப்பிக்க பல லட்சம் ரூபாய் லஞ்சத்தை தனியார் பள்ளிகள் தர வேண்டி இருந்தது. அப்படி போட்ட பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி கூடங்கள், வியாபார மையங்களாக மாற வேண்டியதாயிற்று.
இதற்கு இப்போதைய தவெக அரசு முடிவு கட்ட வேண்டும். அப்போது தான் பள்ளிகள் மீண்டும் சேவை நிறுவனங்களாக மாறும். இது பற்றி வாசகர்களே இந்த செய்தியின் ‛‛கமென்ட்'' பகுதியில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
1 ஆசிரியர்கள் தகுதி ஆனவர்களா, நன்னடத்தை உள்ளவர்களா என்று ஆராய்ந்து அவர்களை நன்னடத்தை ஒழுக்கம் பற்றிய வகுப்புகளை நடத்த நியமிக்க வேண்டும்.
2 அவ்வையின் அறிவுரைகளை ஆரம்ப கல்வி பாடங்களில் சேர்க்க வேண்டும்.
3 வாரம் 3 வகுப்புகள் நெறிகளை போதிக்க வேண்டும்.
4 ராமாயணம் மகாபாரதம் போன்ற கதைகளை போதிக்க வேண்டும்
தினமலர் வாங்கி படிக்கணும்
பள்ளி மாணவர்கள் +2 படிப்பை முடிக்கும் வரை சமூக வளையதளங்களை பயன்படுத்துவதை சட்டபூர்வமாக தடைசெய்யவேண்டும். வீட்டிலும், வகுப்பறையிலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்கும் ஒரு சூழலை பெற்றோரும்-பள்ளி நிர்வாகமும் அமைத்து தர வேண்டும்.
தமிழக கல்வித்துறையை மத்திய பட்டியலுக்கு மாற்றவேண்டும்
மும்மொழி கொள்கையை கொண்டுவர வேண்டும்
நவோதயா பள்ளிகள் இங்கு வரவேண்டும்
விளையாட்டுக்கான நேரம் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும்
கற்க கசடற கற்றபின் நிற்க அதற்கு தக என்ற வாசகம் மறந்து போன நிலையில், பணத்தை அடிப்படையாக கொண்ட கல்வியில் நன்னெறி, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு கல்வி தவிர்க்கப்பட்டு, ஆசிரியர் தகுதி இன்றி செயல்படுவதால் கல்வி கற்றுத் தரும் தன்மை முற்றிலும் மாறி அழிவை நோக்கி செல்வதால், 10 சதவீத மாணவர் வெற்றிக்கு உரிமை கொண்டாடுவதை விட்டு, எல்லாருக்கும் எல்லாம் சமம் எனும் போது கல்வி சீர்திருத்தம் அவசியம் தேவை. ஒழுக்கம் மற்றும் விளையாட்டு மிக அவசியம்.
குழந்தைகளின் மன விருப்பத்தின் பேரிலேயே வாசிப்பில் நாட்டம் ஏற்படுகிறது. டாக்டர் என்ஜினீயர் ஆசிரியர் என பெற்றோர் விருப்பத்தை த் திணிக்கக்ககூடாது. மாணவருக்கும் மறைந்து கிடைக்கும் திறமைகள் ஆவல் போன்றவற்றைக் கண்டுபிடிக்க பெற்றோர் ,ஆசிரியார் மனோத்தத்துவ நிபுணர்களின் கூர்நோக்கில் மாணவரின் interst பாஸ்பேட் கேரியர் அமையவேண்டும்..வேறுமனே டாக்டர் அல்லது என்ஜினீயர் படிப்பில் விருப்பமற்ற ஒருவரை இது போன்று பாடங்களை திணிக்கக்கூடாது. ஒழுக்கம் தற்கால கட்டாயம்.அதற்க்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்மாதிரியாக திகழ்ந்து அறநெறி சார்ந்த கதைகளை மட்டும் சொல்லவேண்டும்.கைபேசி பயன்பாடு வீட்டிற்கும் வெளியிலும் வரயரை க்குள் கொண்டுவரவேண்டும். சோசியல் மீடியாக்களை இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்க வேண்டும். வளர் பருவத்தினருக்கு பாலினக் கல்வியும் உடல் சார்ந்த அறிவும் புகட்டப்பட வேண்டும்.
தாய் மொழி மூலம் 10வது வரை படித்தல் மிகவும் முக்கியம் .
உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் தியானம். மாணவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி பயில ஊக்கப்படுத்தவேண்டும்.
we need to give much importance to creativity. Creativity comes only if there is minimal pressure and little interest. We need to reduce the current heavy syllabus to moderate level - Atleast 50 to 60 % reduction.
Throw away stressfull memorization way of validation in exam.
As per pediatrics Dr. primary class student should sleep attleast 9 to 11 hrs. government should do survey and ensure that all school childrens are getting enough sleep. if they don't get enough sleep, there is a good chance they will get multiple health issue in future including diabetic. please see site pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC5078711/மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்