காவலாளியின் மொபைல் திருடியவர் கைது

குமரன் நகர்: கட்டுமான பணியிடத்தில் அத்துமீறி நுழைந்து, காவலாளியின் மொபைல் போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரவாயலைச் சேர்ந்த சரவணன், 51. மேஸ்திரி. இவர், அசோக் நகர் 12வது அவென்யூவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்கு காவலாளியாக இருந்த அர்ஜுன், நேற்று முன்தினம் அதிகாலை சத்தம் கேட்டு எழுந்தபோது, மர்ம நபர் ஒருவர் கட்டடத்திற்குள் நுழைந்து திருட முயன்றது தெரியவந்தது.

காவலாளி வருவதை கண்டு, சுவர் மீது வைத்திருந்த காவலாளியின் மொபைல் போனை, மர்ம நபர் திருடி தப்பினார். இது குறித்து, குமரன் நகர் போலீசில் சரவணன் அளித்த புகாரை அடுத்து, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தியாகு, 41, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement