நா.த.க., ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி; பொம்மிடி, ரயில்வே ஸ்டேஷன் முன், நா.த.க., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத்தலைவர் ஜெபசிங் தலைமை வகித்தார். மாநில ஒருங்கி-ணைப்பாளர்கள், சந்தோஷ்குமார், ரகு பேசினர்.


ஆர்ப்பாட்டத்தில், பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகா-தார நிலையத்திற்கு சரியான சாலை வசதி அமைத்து தர வேண்டும். பொம்மிடியில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையை சீராக அமைத்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். சுங்கரஹள்ளி முதல் வத்தல்மலை வரை புதிய சாலை அமைக்க வேண்டும். காளிக்கரம்பு - தர்ம-புரி சாலை அமைக்க வேண்டும், என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்-டது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் தர்ம-புரி விஜய், கலையரசன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement