அன்றே சொன்னது தினமலர்: மாநகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு; கோர்ட் உத்தரவால் அதிகாரிகள் கலக்கம்
கோவை: கடந்த 2021ல் அ.தி.மு.க. ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, கோவை மாநகராட்சியில் நேரடி நியமனம் முறையில் 54 இளநிலை உதவியா ளர்கள் நியமிக்கப்பட்டனர். இதை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்திருக்கிறது.
2021 பிப்ரவரியில் நடந்த அந்த நியமனம் தொடர்பாக, அப்போதே, நமது நாளிதழ் கோவை பதிப்பில், 'காத்திருப்போரை கண்டுகொள்ளாமல், அடிச் சாங்க பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர், இரவில் வழங்கப்பட்ட பின்னணியில் இருட்டு' என்கிற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின், தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் விபரம்: 2021ல் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், கோவை மாநகராட்சியில், 103 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருந்தது. சீனியாரிட்டியில், துப்புரவு மேற்பார்வையாளர்/ டிரைவர்/ பதிவுரு எழுத்தர் ஆகியோரில், 34 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 69 பணியிடங்களை நேரடி நியமனம் முறையில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
அப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்தனர். 2021 பிப். 8ல் நேர்காணல் நடந்தது; 440 பேர் பங்கேற்றனர்; 214 பேர் வரவில்லை. உதவி கமிஷனர்கள் கொண்ட அதிகாரிகள் குழு சான்றிதழ்களை சரிபார்த்தது. அன்றைய தினமே நியமன குழு கூட்டம் நடத்தப்பட்டது. அன்றிரவே தேர்வானோர் பட்டியல் இறுதி செய்து, 54 பேருக்கு 'அப்பாயின்மென்ட்' ஆர்டர் தயாரித்து, மறுநாள் வழங்கப்பட்டது.
அரசுக்கு அறிவுறுத்தல் சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்கி விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்க ஊழியர்கள் கோரினர். அதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கவில்லை. பதவி உயர்வு எதிர்பார்த்த ஊழியர்களில் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 54 பேரின் நியமனத்தை ரத்து செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முறைகேடான நியமனத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், காலியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, தகுதியானவர்களை நேர்மையாக நியமிக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
அதிகாரிகள் கலக்கம் பணி நியமனம் நடந்த காலத்தில், உதவி கமிஷனர்களாக பணிபுரிந்த முருகன், சுந்தர்ராஜன், செந்தில்குமார் ரத்தினம், ரவி, அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான குழுவினரே, ஊழியர்களை தேர்வு செய்தனர். இவர்களில் சிலர், தற்போது பதவி உயர்வு பெற்று வெவ்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். யாருமே கோவை மாநகராட்சியில் பணிபுரியவில்லை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முதல்வர் விஜய் வசம் இருக்கிறது. வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை அவர் வலியுறுத்தி வருகிறார். அவரது கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு செல்லும்போது, ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த அறிவுறுத்தக் கூடும் என்பதால், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
திராவிடத்தை ஆண்ட இரு கட்சிகளுமே தமிழ் நாட்டை சூறையாடியிருக்கின்றனர் எல்லா துறைகளிலும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு நீ எவ்வளவு பேர்களை வேலைக்கு நியமித்தாய் நான் அதைவிட கூட நான் நியமித்து காட்டுகிறேன் பார் என்று அவர்களுக்குள் நடந்த போட்டி அந்நியாயமாக மக்கள் பணம் தண்டமாக போயிற்று இதைத்த்தவிர வேலை நியமனத்துக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் கணிசமாக தொகை அந்தந்த அமைச்சர்களுக்கு போய் சேர்ந்துவிட்டது ஏமார்ந்தவர்கள் பாமர மக்கள்தான் இனியாவது இது போன்று நடைபெறாமல் இவைகளை முதல்வர் விஜய்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்
பணமுள்ளவனுக்கு பதவி திராவிஷ பார்முலா
மாநகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு என்று தினமலர் அன்றே சொன்னால் மட்டும் போதுமா? உடனடியாக வழக்கு தொடர வேண்டாமா? நாட்டின் 4 தூண்களில் பத்திரிகையையும் ஒரு தூன்தான்.
காரியம் ஆவனுன்னா யார் கால்லே வேணும்னாலும் உழுவீங்க இப்ப விஜய் கால்.
லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய புண்ணியவான்கள் மீது என்ன நடவடிக்கை திமுக கும்பலை அடியோடு ஒழித்தால் மட்டுமே நாட்டுக்கு விமோசனம்
இந்த மாநகராட்சி பணிநியமன ஊழலில் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அது நடக்குமா என்பதுதான் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. ஏன் என்றால், தமிழகத்தில் பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், ஒருவரும் தண்டனை பெற்றதாக சரித்திரமே இல்லை. அப்படி கைது செய்யப்போனாலும், இதய வலி என்று நாடகமாடி தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். அப்படி ஒரு ஊழல்வாதிக்கு இதயவலி வந்தாலும், சிறையில் அடைத்து மருத்துவம் பார்க்கவும்.
இதில் முன்னாள் மந்திரி, முதவர் அலுவலக உயர் அதிகாரியும் தொடர்பு...
நல்லகாலம் அதிமுக ஆட்சியின்போதே நடந்ததை தினமலர் சுட்டிக்காட்டியது வாழ்த்துக்கள்.
இதுவே, திமுக ஆட்சியில் நடந்து அதை தினமலரில் வெளியிட்டிருந்தால் மற்றுமொரு தினகரன் ஆக்கியிருப்பார்கள்.
54x10 லக்ஷம் பாக்கெட்டை நிரப்பி இருக்கும்.
பெயரை பார்த்தாலே ஊழல் ஞாபகம் வரவேண்டாமா?மேலும்
-
செழித்து வளரும் அரச செடிகளால் நடவாவி கிணறு வலுவிழக்கும் அபாயம்
-
பல்லாங்குழியான பாலாற்று பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
-
மேற்கு மாம்பலத்தில் ஆக்கிரமிப்புகளால் 40 அடி சாலை 10 அடியாக குறுகி பாதிப்பு
-
மனைவியுடன் தகராறு மகன் மாயம்: தாய் புகார்
-
திருமலை கோவிலில் செப்., மாத சேவைக்கு முன்பதிவு தொடக்கம்
-
சாய்ராம் குரூப் நிறுவனம் அன்ன தானம் வழங்கல்