திருமலை கோவிலில் செப்., மாத சேவைக்கு முன்பதிவு தொடக்கம்
சென்னை: திருப்பதி, திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் செப்., மாத சேவைகளுக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அங்கப்பிரதக்ஷணம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் முன்பதிவு மாலை 3:00 மணிக்கு தொடங்குகிறது.
வரும் செப்., மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு நாளை காலை 10:00 மணிக்கு தொடங்குகிறது. மாலை 3:00 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது.
அடுத்தமாதம் திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில் சிறப்பு தரிசனம், 200 ரூபாய்க்கான முன்பதிவு, வரும் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு தொங்குகிறது என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரி கிராம வாங்கி சர்வதேச யோகா தினம்
-
புதுச்சேரியில் தேசிய பாரம்பரிய நடன விழா பாரம்பரிய கலைகள் சங்கமத்தால் உற்சாகம்
-
வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
-
இலவச மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
-
நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுமா?: 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
-
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement