சிங்கையில் புதிதாக மாறும் பயணிகள் நிழற்குடைகள்

கோவை: எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி அருகில், சிங்காநல்லுார் குளத்தையொட்டிய ‘போட் ஹவுஸ்’ ஸ்டாப் உட்பட மூன்று இடங்களில் புனரமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகளை, எம்.எல்.ஏ., ஸ்ரீ கிரி பிரசாத் முன்னிலையில் துாய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் நேற்று திறந்து வைத்தனர்.

‘‘சிங்காநல்லுார் தொகுதியில் மோசமான நிலையில் உள்ள மேலும் 40 பயணியர் நிழற்குடைகள் புனரமைக்கும் பணி் விரைவில் தொடங்கப்பட உள்ளது,’’ என்றார் எம்.எல்.ஏ., ஸ்ரீ கிரிபிரசாத்.

Advertisement