மனைவிக்கு கத்திக்குத்து கணவனுக்கு ஓராண்டு சிறை
சேலம்; மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு, ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, சேலம் நீதி-மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம், ஆண்டிப்பட்டி ஹவுசிங் போர்டு பகு-தியை சேர்ந்தவர் ஜானகிராமன், 52, கூலி தொழி-லாளி. இவரது மனைவி புஷ்பா, 48, இவர்க-ளுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2022 ஜன., 13ல், ஏற்பட்ட தகராறில் ஆத்தி-ரமடைந்த ஜானகிராமன், கத்தியால் மனைவியை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த புஷ்பா, அரசு மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செவ்-வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜானகிராமனை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜானகிராமனுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி ஜெய்குமார் தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை
Advertisement
Advertisement