மகளுக்கு தொல்லை தந்த சித்தப்பாவுக்கு 'போக்சோ'

தஞ்சாவூர்: திருவையாறு அருகே, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சித்தப்பா, 'போக்சோ'வில் கைதானார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது இளம்பெண். இவரது தாய் இறந்த நிலையில், தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார். எனவே, பாட்டி பராமரிப்பில் இளம்பெண் வளர்கிறார்.

இளம்பெண்ணின் சித்தப்பா முறையான திருவேதி, 37, என்பவர், ஹோட்டல் ஊழியராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மதுபோதையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றார்.

இளம்பெண்ணின் பாட்டி, திருவையாறு மகளிர் போலீசில் அளித்த புகாரில், போக்சோவில் வழக்கு பதிந்து, திருவேதியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement