யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
சென்னை: யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை என சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் அளித்த பதிலுரை: தவெக அரசு தேர்வு செய்த நிரந்தரமாக என் மனதில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நாம் கொள்கை ரீதியாகவும், நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டு இருந்தாலும் மக்கள் பணி செய்வது தான் நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரே பணி.
இந்த விஜய் முன்னேற்றத்திற்கு நான் மட்டுமல்ல, தமிழக மக்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். என் உயர்வுக்கு காரணமான கடவுளுக்கு சமமான மக்களுக்கு நன்றி. ரசிகர் மன்றம் துவங்கி மக்கள் பணி செய்து, கடுமையாக உழைத்து இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம். தமிழகத்தின் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி உள்ளோம். மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்.
ரியல் கிடையாது
ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்தது மாதிரி சிலர் இமேஜ் கிரியேட் பண்றாங்க. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. எதிர்த்து பேசினால் தான், எதிர்க்கட்சி என சிலர் நினைக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்ததால் முதல்வர் ஆனேன். அரசியலைப் பேசியதால் என் படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்னைப் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.
சாமானியர்கள் ஆட்சி
என் உழைப்பு உயர்வுக்கு தமிழக மக்கள் தான் பின்னால் உள்ளனர். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என சொல்வது தான் நமது ஆட்சி. காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாசாரத்தை ஒழித்துள்ளோம். நேர்மையான நிர்வாகம் என்பதில் த.வெ.க. நிர்வாகம் உறுதியாக உள்ளது.
அண்ணாவின் சாமானியர் ஆட்சி போல் விஜய் ஆட்சியில் மிக மிக சாமானியர்கள் ஆட்சியில் உள்ளனர். இளைஞர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டோருக்கு பதிலாக தான் நமது ஆட்சி. 2026 தேர்தலில் யாராலும் உடைக்க முடியாது சொன்ன சாதி, மதத்தை உடைத்துள்ளோம். யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை.
பணம் பறிக்க
எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றனர். ஆமாம் நாங்கள் புதுசுதான் , எங்களுக்கு ஒன்றும் தெரியாதது தான், மக்கள் பணி செய்ய தெரியும், மக்கள் பணத்தை சுரண்ட தெரியாது. ஊழல் என்ற பெயரில் பணம் பறிக்க தெரியாததுதான்.
கோவில் பணத்தை கொள்ளை அடிக்க தெரியாததுதான், அரசு வருமானத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மாற்ற தெரியாததுதான், போதை கலாசாரத்தை வளர்க்க தெரியாததுதான். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டசபையில் முதல்வர் விஜய் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு உரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சிறந்த பேச்சு வாழ்க சிம் ,
நல்ல பதிலடி பேச்சு. நீங்கள் இவனுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். திமுகவினர் செய்யும் நக்கல், நையாண்டி பேச்சுகள் tvk ஓட்டு வங்கி உயர உதவும். மத்தியில் ராகுல்காந்தி பி ஜே பி க்கு உதவுவது போல. ஆணவத்தாலும் திமிராலும் திமுக மெல்ல மெல்ல தானாக அழியும்.
தி.திராவிட கூட்டம் நல்ல செயல்களை செய்ய விடமாட்டார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தால், தேவையான அனைத்து விசயங்களையும் அ.தி.மு.க சாதித்து கொள்ளும். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், தேவையான சகல விசயங்களை தி.மு.க சாதித்து கொள்ளும் சம்மந்தம் செய்துகொள்ளும் ... ஆக இவனுக திருட்டு திராவிட வித்துகள். முன்னால் அனைத்து மந்திரிகள், ஊலலை பட்டியல் எடுத்து, சட்டபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்பதான் இந்த இத்துபோன மந்திகள் லீலைகள், தரகர் சேவைகள் தமிழக மக்களுக்கு தெரியவரும் விஜய் மேலே மக்கள் நம்பிக்கை மேலும் கூடும்.
உன்னை பார்க்க வந்த மக்கள் தானே செத்துப்போனார்கள் உன்மேல பழி போடாமல் யார் மேலே போடணும்னு நீயே சொல், முடிந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே வை.
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
???? எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
???? வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
நீங்க உங்க வேலையை தங்கு தடையின்றி செய்யுங்கள். கலைஞர் பேரன் என்ற ஒரு தகுதியை தவிர வேற எந்த தகுதியும் இல்லாதவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். கதறுபவர்கள் கதறி கொண்டே இருக்கட்டும்
முதலமைச்சரின் பதிலுரையை கேட்க தைரியமில்லாத தொடைநடுங்கிகள் சட்டமன்ற வெளிநடப்பு செய்த திராவிட மாடல் பனங்காட்டு நரிகள்.
தவெக ஓமலூர் எம்.எல்.ஏ. சீட்டுக்கு போட்டியிட்டு குறைந்த வாக்கில் தோற்றவர் தனது நன்றி அறிவிப்பு மீட்டிங்கில் குற்றம் சுமத்தி பேசியது:: ஒமலூர் தொகுதி எல்லைக்கு அருகே உள்ள சேலம் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் மக்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்ததால், ஒமலூர் தொகுதி மக்களும் ஓட்டுக்கு பணம் தரப்படும் என்று நம்பியதால் ஒமலூரில் தவெக தோல்வி அடைந்ததாக வருத்தப்பட்டு பேசினார். இதற்கு என்ன பதில் சியெம் சார்?. உங்களுடைய வேட்பாளர்களில் பாதிப் பேர் மட்டும் உங்க ரசிகர் மன்றத்திலேருந்து வந்தவங்க. மீதிப்பேர் வளமான எதிர்காலம் தேடி வந்த சுத்தமான அரசியல் வாய்ப்பாளர்கள். உங்க கட்சியை இன்னும் 3 வருஷத்தில் கைப்பற்றிவிடுவார்கள். லாட்டரி கும்பல் உஷார்
இந்த தவறுகளையெல்லாம் செஞ்சவங்க மேல எப்போ நடவடிக்கை மிஸ்டர் பி டீம் காப்டன் ??
பயங்கரவாதிகள் தான் யாரைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். மதவாத மத்திய அரசும் இந்த ரகமே .
திமுக திரும்ப வந்தா வா. இப்போ ஓரமா பொய் உக்காரு.மேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு