குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பூ.குளத்துப்பட்டியில் குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தினால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நக்கலப்பட்டி ஊராட்சி பூ∙குளத்துப்பட்டி கிராமத்தில் குடிநீர், கழிவுநீர்கால்வாய், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் காலை 7.20 மணியளவில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி தாலுகா போலீசார் உரிய அதிகாரிகளை வரவழைத்து தீர்வு காணப்படும். தற்போது பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள், மற்ற வேலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதால் கலைந்து செல்லுங்கள் என பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
மறியல் காரணமாக காலை 8.20 வரை ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு