நாளை மறுநாள் மின் துறை வெள்ளை அறிக்கை; அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

12



நமது நிருபர்




நாளை மறுநாள் (ஜூன் 25) மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் நிர்மல்குமார் கூறியதாவது: மின்வாரியத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்; நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

Party Fund சொன்னதும் திமுகவிற்கு பயம். திருடனுக்கு தேள் கொட்டியது போல வெளிநடப்பு செய்துவிட்டார்கள். வழக்கு கண்டிப்பாக தொடுக்கப்படும்.பணம் கொடுக்காமல் கடந்த ஆட்சியில் Transfer வாங்கி இருக்காங்களா?

எல்லோருக்கும் ஒரு பாணி உள்ளது; எம்ஜிஆர் பேசிய நேரத்தில் அவரை கிண்டல் செய்தனர். அதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றுகின்றனர். இபிஎஸ்ஐ சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது; அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக சந்திக்கவில்லை.

முன்பு தலைமைச் செயலகத்திற்குச் சாமானிய மக்கள் வந்ததில்லை. அமைச்சர்களுக்குப் பணம் வாங்கித்தரும் புரோக்கர்கள் தான் சுற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்கத் தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

Advertisement