மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
சென்னை:மோட்டார் வாகன துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
நம் நாட்டில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனம், மின்சார இரு சக்கர வாகனம் தயாரிக்கும் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, பல நுாறு கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
தமிழகத்தில், மின்சார வாகன உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மின் வாகன தொழில் பூங்காவை, சிப்காட் நிறுவனம் அமைத்துள்ளது. ஏற்கனவே, ஓசூரில் பல நிறுவனங்களின் வாகன தயாரிப்பு ஆலைகள் உள்ளன.
எனவே, ஓசூர் அல்லது சூளகிரியில் இரு சக்கர வாகன தயாரிப்பு ஆலையை அமைக்க வலியுறுத்தி, முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனத்துடன், தொழில் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க ஆந்திரா மற்றும் தெலுங்கானாவும் போட்டி போடுகின்றன.
மேலும்
-
செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்
-
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?
-
மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
-
டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி
-
லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம் அமலாக்கத்துறை விசாரணை