வெறும் பஞ்ச் டயலாக்; உதயநிதி விமர்சனம்

4

சென்னை: முதல்வர் விஜய் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக்குகளும் இருந்ததே தவிர, சட்டம் ஒழுங்கு குறித்து எந்த பதிலும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

அவரது அறிக்கை:சட்டசபையில் கவர்னர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதல்வர். அவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single takeல் shoot செய்ய வேண்டும் என்று சபாநாயகர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதல்வரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,மின்வெட்டு, விவசாயிகள் பிரச்னை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழகத்துக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதல்வராக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

Advertisement