குவைத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி

கூடலுார்:குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவரை வண்டிப்பெரியாறு போலீசார் மும்பை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

குவைத்தில் வேலை வாங்கித் தருவதாக குமுளி அருகே வண்டிப்பெரியாறைச் சேர்ந்த ஆல்வின் என்பவரிடம் ரூ.4.5 லட்சம் பணம் பெற்று தலைமறைவான பத்தனம்திட்டாவை சேர்ந்த அருண் பிரகாஷ் 38, என்பவரை வண்டிப்பெரியாறு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் குவைத்தில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருண்பிரகாஷ் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வண்டிப்பெரியாறு போலீசார் தனிப்படை அமைத்து மும்பை விமான நிலையத்திற்கு சென்றனர். விமானத்திலிருந்து வந்த அருண்பிரகாசை கைது செய்தனர். இவர் ஏற்கனவே இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

Advertisement