லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம்: அமலாக்கத்துறை விசாரணை
சென்னை: லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள சார் -- பதிவாளர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்களின் சொத்து விபரங்கள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
தமிழகம் முழுதும் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 4ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, 46 சார் - பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 37.75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
அதேபோல, கடந்த 18ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் என, 40 இடங்களில் சோதனை நடத்தி, 37.81 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, சார் - பதிவாளர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.
இந்த வழக்கில் சிக்கிய சென்னை வளசரவாக்கம், சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், பரமக்குடி, ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
அதேபோல, சென்னை விருகம்பாக்கம், செம்பியம், துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டம் விருத்தாசலம்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, திருப்பூர் மாவட்டம் பொங்கலுார், சேலம் சார் - பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் சொத்து விபரங்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.
தமிழ் நாட்டில் லஞ்சத்தை ஒழித்தாலே எல்லா துறைகளிலும் வரவு செலவு விட அதிகமாக இருக்கும் பற்றாக்குறையே இருக்காது புது புது திட்டங்களை அமல் படுத்தலாம் முதல்வர் விஜய் அரசு இதை முன்னின்று செய்யம் மக்களும் அதற்கு ஆதரவுகொடுக்கவேண்டும்
லஞ்சம் ஊழல் எல்லாம் நம் ஆட்டில் ஆழமாக வேரூன்றி நிற்கும் பேய்கள்.. அவற்றை விரட்டுவது சுலபமல்ல. ஆனால் அதற்காக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் பாராட்டப்பட வேண்டியதே. நம் குழந்தைகளுக்கு நாம் விட்டு செல்லும் மிகப் பெரிய செல்வம் நேர்மையான, ஊழலற்ற சமுதாயம் தான்.
இப்படித்தான் நாங்க அடிக்கடி பிலிம் காட்டுவோம். பார்ப்பதும் பார்காததும் உங்க விருப்பம். இன்னும் நிறைய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. பாருங்க என்ஜாய் பண்ணுங்க. புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை அமுக்குங்க.
பறிமுதல் மற்றும் தண்டனை தான் கேள்விக்குறி. இறைவன் காப்பாற்ற வேண்டும்.
அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா பாவ்லா காணபிபதற்க்குத்தான். பிடித்து எல்லோரையும் விட்டு விடுவோம்.
அப்பத்தானே எங்களுக்கு எதாவது சிக்கும்
இந்திய அரசியலமைப்பின் Article 245 மற்றும் 246 வழங்கும் சட்ட இயற்றும் அதிகாரத்தின் அடிப்படையில், ஊழல் நிரூபிக்கப்பட்ட அரசு அதிகாரிகளின் சட்டவிரோத சொத்துகளை அரசுக்கு உடனடியாக இணைக்கும் வகையில் சட்டத்தை சட்டமன்றம் கொண்டு வரலாம். இது Article 300A-க்கு முரணல்ல, ஏனெனில் சட்டத்தால் விதிக்கப்பட்ட பறிமுதல் அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டது.”
Dear Sir without respective ministers IAS Secretary support no looting Cutting Bribing can take place. While the CM and Ministers and MLAs can be thrown out by ballots, these IAS collectors maximum punishment is rotation only.
தமிழக பாஜகவில் ஆபிசர் வேலைக்கு ஆள்பிடிக்கிறார்களா?
இவை தவிர குற்றப் பின்னணியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றப் பின்னணியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மீதும் சட்டம் பாய்ந்து நடவடிக்கை எடுப்பதையும் தான் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களை தப்பிக்க விடுவது அநியாயம், மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
தங்கள் பெயரில் சொத்து வாங்கி குவிக்க இளிச்சவாயர்களா ? மனைவி இணைவி துணைவி மட்டும் இல்லாமல் ரியல் எஸ்டேட் கம்பெனிகளில் முதலீடு போன்றவைகளையும் வெளியில் அம்பலமாக்க வேண்டும் ..