அடையாளம் தெரியாத வாகனம் மோதி யாசகர் பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்ற யாசகர் உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே உள்ள வராக நதி ஆற்று பாலத்தின் மீது நேற்று முன்தினம் 70 வயது மதிக்கத்தக்க யாசகர் நடந்து சென்றார். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம், யாசகர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத யாசகர் இறந்தார்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் வி.ஏ.ஓ., சத்திய சுந்தரம் புகார் அளித்தார். போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement