போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கிணத்துக்கடவு: கொண்டம்பட்டி ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ஈஸ்வர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், ‘ஆன்ட்டி டிரக் கிளப்’ மாணவர்கள் மற்றும் பேரூர் டி.எஸ்.பி., சுரேஷ், கிணத்துக்கடவு போலீசார் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்த பேரணியானது, கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் துவங்கி, செக்போஸ்ட் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் வரை நடந்தது.

இதில், மாணவர்கள் கைகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், போதை பொருள் தடுப்பு குறித்து வைக்கப்பட்டிருந்த பிளக்சில் ஈஸ்வர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கையெழுத்திட்டனர். மேலும், போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து டி.எஸ்.பி., மாணவர்கள் இடையே பேசினார்.

Advertisement