முதல்வர் விஜய் சைகை செய்தது மரபை மீறியது அல்ல; சபாநாயகர் அறிவிப்பு
நமது நிருபர்
சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த 'பினிஷிங்' சைகை, சபையின் மாண்பையோ மரபையோ மீறியது அல்ல என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, முதல்வர் விஜய், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அவர் தன் உரையை முடிக்கும்போது, சபாநாயகரை நோக்கி, ''தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருந்திருந்தால், ஒரு ஆக்ஷன் செய்ய வேண்டும் என தோன்றியது. எல்லோரும் போய் விட்டனர். நீங்கள் அனுமதித்தால், அதை செய்ய விரும்புகிறேன்,'' என்றார்.
அதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி முடிவானதும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'முடித்து விட்டோம்' என்பதை, கையால் சைகை செய்தார். அதுபோல் சட்டசபையில், முதல்வர் விஜயும், 'முடித்து விட்டோம்' என்பது போல் கையால் சைகை செய்தார். அதை த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி வரவேற்றனர்.
விஜய் செய்த சைகைக்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இன்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த 'பினிஷிங்' சைகை, சபையின் மாண்பையோ மரபையோ மீறியது அல்ல. தமிழக சட்டாசபையில் நேற்று மரபை மீறி எதுவும் நடக்கவில்லை'' என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார்.
தமிழகத்தையே சூறையாடிவிட்டு, புத்தன் காந்தி போல வேஷம் போடும் திமுகவினர் செய்யும் அழும்பிற்கு, இந்த சைகை மட்டும் போதாது என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
முதல்வரின், இந்த ஆக்ஷன் மற்றும் வசனம் மிகவும் இரசிக்கும்படியாகத்தான் இருந்தது. இதோடு நில்லாமல் மக்களுக்கு நல்லதையும் செய்து தன்னை நிரூபிக்கவேண்டும்.
மக்கள் பணத்தை தொட்டவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பி செல்லா காசு ஆக்குவதுடன், மக்களின் மனச்சிறையில் என்றென்றும் குடிகொள்ள, ஆவண செய்யவேண்டும் நமது முதல்வர்.
வாழ்த்துக்கள்
கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்ற தன்னலமற்ற ஆற்றல் மிகு தலைவர்கள் அமர்ந்த இருக்கை. எத்தனையோ மக்கள் நலன் சார்ந்த வாதப், பிரதிவாதங்கள் நடந்த இடம். இது போன்ற சைகை சரியா, தவறா? என்கிற அளவுக்கு தமிழக சட்டசபை இன்று வந்து விட்டது. நடை பெறும் சம்பவங்கள் மனதிற்கு மிகவும் வேதனை தருகிறது.
உதை அண்ணே .. வாய கொடுத்து _____புண்ணாகிக்கவேணாம் .. அப்பரும் அப்ப்பா மாதிரி உங்களையும் தேடவேண்டி வரும் ..
தீம்க வுக்கு மறக்க முடியாத நல்ல பாடங்களை புகட்ட வேண்டும்
ஆளும் கட்சி எதை செய்தாலும் சரி என்று கூறுவது தான் சபாநாயகர் மரபு. இதையே எதிர் கட்சி செய்திருந்தால் மரபை மீறிய செயல். இதை யாராலும் மாற்ற முடியாது. எழுதப்படாத விதி.
மரபு மரபு என்று உளற வேண்டாம். 1967 க்கு முன் தமிழ்த் தாய் வாழ்த்து கிடையாது. அதை சட்டம் போட்டு நுழைத்து மரபு மாற்றப் பட்டது. முதல்வர் உரையில் எண்களை ஆங்கிலத்தில் படித்தார். பெரிசா மரபை காப்பாத்தி ஒண்ணும் கிழிக்கப் போவதில்லை
அப்போ சபையில் யார் வேண்டுமானாலும் செய்கை செய்யலாமா...
வரும் நாட்களில் சபை நடவடிக்கை நன்றாக இருக்கும்..
மிகவும் சரி, அடுத்து குத்து பாட்டுக்கு கூட டான்ஸ் ஆடுவார், சபையில் ரசிக கூட்டம் விசிலடித்து ஆரவாரம் செய்யும், இது எங்கள் ஆட்சி, எங்கள் தலீவரோட ஆட்சி, நாங்க வைத்தது தான் சட்டம், சட்டம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என தீயசக்தி ஆட்சியில் கண்டிருக்கிறோம். யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பது இயற்கைதானே...
எங்கள் தளபதி செய்துகாட்டியதை அனைவரும் மாற்றியோசிக்கவேண்டும் ..
1. மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி ....
2. ஊழலாட்சிக்கு முற்றுப்புள்ளி ....
3. பாலியல்வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி ....
4. போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி ....
5. லஞ்சம் மற்றும் லாவண்யத்துக்கு முற்றுப்புள்ளி ....
6. போலி டெண்டர்களுக்கு முற்றுப்புள்ளி ....
7. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி ....
8. வாயால் வடைசுடும் பேச்சிக்கு முற்றுப்புள்ளி ....
இதைத்தான் எங்கள் தளபதி மிக மிக தெளிவாக ஒரு " பினிஷிங் " செய்கைமூலம் மிக சிறப்பாக ஒரே ஒரு ஆக்ஷனில் செய்துகாட்டிவிட்டார் ..
அதற்க்கு ஏன் ஸ்டாலின் செய்கையை காப்பி அடிக்கவேண்டும் . சொந்தமாக எதாவது செய்கை செய்யலாமே . காரணம் என்ன தெரியுமா , விஜய் அவர்கள் ஸ்டாலின் சாரின் மிகப்பெரிய பேன் ஆகிவிட்டார் . இனிமேல் ஸ்டாலின் அவர்களை காப்பி அடிக்கும் நிறைய விஷயங்களை எதிர்பார்க்கலாம் .
1. மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி அப்புறம் என்னத்துக்கு ராகுலோட கூட்டணி
2. ஊழலாட்சிக்கு முற்றுப்புள்ளி சோபால பெரிய லெவெலில் பண்ணுவோம்
3.பாலியல்வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி 50 நாளில் ஏகப்பட்ட பாலியல் வழக்கு
4.போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி தஞ்சவோரில் உன்னோட நிர்வாகிதான் கைது
5. லஞ்சம் மற்றும் லாவண்யத்துக்கு முற்றுப்புள்ளி ஊழலுக்கு லஞ்சத்துக்கும் என்ன வித்யாசம் உன் 2 கெவ்லவிக்கான பதில்
6.போலி டெண்டர்களுக்கு முற்றுப்புள்ளி அது ஆதவ் கையில் வரும்
7. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி மன்னராட்சி வாரிசு எல்லாம் ஒண்ணுதான் முதல் கேள்விக்கான பதில்
8.வாயால் வடைசுடும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி விவசாய கடன் தள்ளுபடி, 2500 rs ஓசி, 18000 rs cut பண்ணிட்டு 12000 rs 1 கிராம் தங்கம்,, யாருப்பா வாயால் வடை மட்டும் இல்லை பஜ்ஜியும் சேர்த்து சுட்டவன் உன் தொளபதி
ஆளும்?கட்சி செய்தால் தவறில்லை எதிர்கட்சிகள்"செய்தால் குற்றம்தான்? அதானே தூய?சக்திகளா?
கதறல்கள் புலம்பல்கள் ஒப்பாரிகள் தொடர்ந்து இருக்க வேண்டும்.
வாயில் ரெண்டு விரலை விட்டு விசிலடித்திருந்தாலும் வரவேற்றிருப்பார்மேலும்
-
சாப்ட் ஹாக்கியில் பதக்கம்பல்கலை மாணவிக்கு பாராட்டு
-
ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்; இந்தியா எச்சரிக்கை
-
ஹைதராபாத்தில் உதயமானது 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ'!
-
கோவிலுார் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் தவிப்பு
-
திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வா? உயர்த்தவே இல்லை என்கிறார் அமைச்சர் ரமேஷ்
-
ஜம்மு காஷ்மீர் விவகாரம்; ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி