சேவை ஒதுக்கீட்டில் படித்து பணிக்கு வராத 680 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
சென்னை: 'சேவை ஒதுக்கீட்டில் படித்து, முன் அறிவிப்பின்றி, 1,420 டாக்டர்கள் பணிக்கு வராத நிலையில், 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்து உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்கள், சேவை ஒதுக்கீட்டின் கீழ், அரசு மருத்துவ கல்லுாரிகளில், பட்டமேற்படிப்பு படிக்கின்றனர். அவ்வாறு படிப்போர், ஓய்வு பெறும் வரை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றாவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், 40 லட்சம் ரூபாய் பிணையத் தொகை, வட்டியுடன் செலுத்த வேண்டும்.
ஆனால், சேவை ஒதுக்கீட்டில் படித்த டாக்டர்களில் பலர் எவ்வித முன்னறிவிப்புமின்றி விடுப்பில் சென்றதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறப்போர் இயக்கத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து, முன் அறிவிப்பின்றி, பணிக்கு வராத டாக்டர்கள் மீதான நடவடிக்கை குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கை:
சேவை ஒதுக்கீட்டில் படித்த டாக்டர்களில் பலர், தன்னிச்சையாக எவ்வித முன் அறிவிப்புமின்றி, பணிக்கு வராமல், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற சென்று விடுகின்றனர். அவர்கள் மீண்டும் பணியில் சேர அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதனை மீறினால், '17 பி' ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பிணையத்தொகையை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை, 1,420 டாக்டர் கள் தன்னிச்சையாக, பணிக்கு வராமல் இருக் கின்றனர். அவர்களில், 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 740 பேர் ஒழுங்கு நடவடிக்கையில் உள்ளனர். விதிகளை மீறு வோர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் உள்ளது. என்ன நடவடிவகை எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. சாதாரண மனிதன் தவறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறான். ஆனால் தவறு செய்யும் அரசு மத்திய மற்றும் மாநில ஊழியர்கள் தவறு நிரூபணமாகி தண்டிக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் . உங்கள் சட்டங்கள் மற்றும் அரசாங்கங்கள் படித்து உயர் கவ்வி மற்றும் உயர் பதிவிகளில் தவறு மற்றும் கோடிகளில் நாட்டு நலனுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு நட்டம் ஏற்படுத்தி கொள்ளையிட்ட உள்ள அனைத்து ஊழியர்களையும் வெகுவாக காக்கிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இவர்கள் என்று சாதாரண கைதிகளை போல என்று சிறையில் தண்டனைப்படுத்தப் படுவார்கள் ? அரசு சலுகையில் படித்து நாட்டை கொள்ளையடித்த இவர்களை தமிழ்நாடு அரசு என்று தண்டிக்க போகிறது ? வெளிப்படையான அரசாங்கம் தானே இது ?
அவர்களுக்கு வாதிட மக்கள் வரிப்பணத்தில் MP ஆக பதவி அனுபவித்துக்கொண்டு இந்த படித்த கொள்ளையர்களுக்கு வாதிட சீனியர் வக்கீல்கள் ஒரு புறம். ஏன் இந்த வக்கீல்களுக்கு மனசாட்சி இல்லையா ? இவர்கள் தான் ஜனநாயகத்தை காப்பாற்றும் தூண்கள் என்ன வர்ணிக்கப்பட்டு சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் அலங்கரிக்கிறார்கள்.
ஆக சட்டங்களை மீள் பரிசீலனைக்குட்படுத்துவது குறித்து எந்த அரசுக்கோ அல்லது அதிகாரிக்கோ கவலை இல்லை. இந்த நிலை என்று மாறுமோ ?
இம்மாதிரி அரசு ஒதுக்கீட்டில் மேற்படிப்பு/ super speciality பட்டம்
பெற்ற மருத்துவர்கள் அரசு மருத்துவ மனைகளில் விதிப்படி பணி செய்யவில்லை என்றால் அவர்கள் பெற்ற உயர் படிப்பு தகுதிகளை cancel செய்து அவர்கள் பெற்ற MBBS பட்டத்தையும் ரத்து செய்தால் தான் இந்த அராஜகமான, ஏமாற்றும் மருத்துவர்கள் வழிக்கு வருவார்கள். இனி அரசு ஒதுக்கீட்டில் முதுகலை மற்றும் super speciality பட்டம் பெறும் மருத்துவர்கள் அரசுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
அரசுப்பணி ஒதுக்கீட்டில் மேற்படிப்பு படித்து முடித்த பின்னும் போஸ்டிங் போடாமல் இழுத்தடித்து அவர்களது எதிர்காலத்தை வீணடித்த அரசு எப்படி பதில் சொல்லும்?
திரும்ப சேராததற்கு முக்கிய காரணம் நிபுணருக்கு தேவைப்படும் வசதிகள் கருவிகள், பணியாளர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதுதான். அன்னிய நாட்டில் மேற்படிப்பு படித்தவர்களை பணிக்குத் திரும்ப அழைப்பதில்லை..வெகு சிலர் தனியார் பிராக்டீஸ் நன்கு இருந்தால் அரசுப்பணியைத் தவிர்க்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விட்டுவிட்டு சிறிதுகாலம் கடந்தது அதையும் மீறி, இவர்கள் பணிக்கு வரவில்லையென்பற்றால் வேலையைவிட்டே அவர்களை அகற்றிவிட்டு வேலையில்லா பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கலாம்