மானாமதுரையில் தனியார் பஸ்கள் கவிழ்ந்து 25 பேர் காயம்

மானாமதுரை:மானாமதுரை அருகே 2 தனியார் பஸ்கள் கனமழை பெய்து கொண்டிருந்தபோது அதி வேகமாக போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்டபோது ஏற்பட்டு பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 25 பேர் காயமுற்றனர்.

மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றுவதற்காக போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு மானாமதுரை பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற இரண்டு தனியார் பஸ்கள் மேலப்பசலை அருகே ஒன்றை ஒன்று முந்தி செல்வதற்காக அதிவேகமாக சென்றதால், 2 பஸ்களும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் இரு பஸ்களிலும் பயணித்த 25 பேர் வரை காயமுற்றனர்.



Advertisement