கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துாரை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் செந்தாமரை,19; இவர், தேவியாக்குறிச்சி தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த 26ம் தேதி இரவு செந்தாமரை சாப்பிட்டு முடித்து விட்டு அவரது குடும்பத்தினருடன் துாங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது செந்தாமரை இல்லாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் செந்தாமரையை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை ஜெயராஜ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement