கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்ப-டுத்த வலியுறுத்தல்



மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.

இதில், மழைக்காலங்களில் கே.ஈச்சம்பாடி தடுப்பணையிலிருந்து வீணாக செல்லும் உபரிநீரை, 66 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் நீரேற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தென்பெண்ணை-யாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி, கூட்டுறவு பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி, முழுமையாக ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement