சென்னை-போடி ரயில் பராமரிப்பு பணியால் தாமதம்
தேனி:சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி, சேலம், கரூர், மதுரை வழியாக போடிக்கும், மறுமார்க்கத்திலும் சனிக்கிழமைகள் தவிர வாரத்தில் 6 நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜூன் 28 சென்னை சென்ட்ரலில் இரவு 10: 30 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் போடிக்கு ஜூன் 29 காலை 8:50 மணிக்கு வந்து சேரவேண்டிய நிலையில் 2:30 மணி நேரம் தாமதமாக 11:27 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை வரும் நாட்களில் தாமதம் இன்றி இயக்க பயணிகள் வலியுறுத்தினர்.
இதுபற்றி ரயில்வே அதிகாரி கூறுகையில், 'அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் போடி ரயில் தாமதமாக புறப்பட்டு வந்தடைந்தது,' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரஷர் இயந்திரத்தில் புடவை சிக்கி பெண் பலி
-
ஏர்போர்ட்டில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
-
கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் 1.62 லட்சம் கால்நடைகளுக்கு இலக்கு
-
திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத தெருக்கூத்து
-
பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு
-
அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய கார்; வம்சாவளி இந்தியர் பலி
Advertisement
Advertisement