போதை இளைஞர் கைது

அவிநாசி, ரங்கா நகர் பகுதியில் வசிப்பவர் ஹரி, 29. தாராபுரம், பெரிய காளியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், அவிநாசி, ரங்கா நகரிலுள்ள தனது தந்தையை பார்க்க ஹரி வந்தார். அப்போது போதையில் இருந்த அவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் வடமாநில பெண்ணின் கையைப் பிடித்து தகராறு செய்துள்ளார். அப்பெண் அவிநாசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அவிநாசி போலீசார் ஹரியை கைது செய்தனர்.

Advertisement