போதை பழக்கத்திலிருந்து மீள அமைச்சர் அறிவுரை

1

கோவை: மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்கு, போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு வார்டில் அனுமதிக்கப்பட்டோரின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அங்கு அனுமதிக்கப்பட்ட 34 வயது கொண்ட நபரிடம், போதை பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமென கூறினார். வார்டில் இருந்த மற்றொருவரிடம், உங்கள் பகுதியில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இனி அப்பழக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வெளியே வாருங்கள் என கூறினார்.

ஆய்வின் போது, மருத்துவமனையில் பார்க்கிங் வசதி இல்லை என அங்கிருந்த பெண்மணி ஒருவர் கூறியதும், அதுகுறித்து 'டீன்' கீதாஞ்சலியிடம் விசாரித்தார்.

மதுவிலக்கு துறை அமைச்சர் என்பதால், நேரடியாக போதை மீட்பு வார்டுக்கு சென்றதும், அங்குள்ளோரின் நிலை குறித்து கேட்டறிந்ததும், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement