அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு

46



நமது நிருபர்




தன் மீது அவதுாறு பரப்பியதாக, அண்ணாமலை மீது தொடர்ந்த வழக்கை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.

தமிழக பாஜவில் இருந்த போது அண்ணாமலை 2023ல் 'டி.எம்.கே. பைல்ஸ்' என்ற பெயரில் , பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார் . அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு சொத்து விபரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகி டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

மறுமுறை வழக்கு வரும்போது, மீண்டும் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் வழக்கை பாலு வாபஸ் பெற்றுள்ளார்.


டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணையில் நடந்தது என்ன?

படிக்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு; டிஆர்பாலு திடீர் வாபஸ் பின்னணி என்ன?; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement