அரசியல் மாறி விட்டது; அரசியல் கட்சிகளும் மாற வேண்டும்: அண்ணாமலை
சென்னை: ''அரசியல் மாறி விட்டது; அதற்கு தகுந்தபடி அரசியல் கட்சிகளும் மாற வேண்டும். இல்லையேல் அவை அழிவை சந்திக்க நேரிடும்,'' என்று 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசியல் என்பது அதிகாரத்திற்கான போட்டி அல்ல. இன்றைய அண்ணாமலை, இன்னும் 20 ஆண்டுகளில் காலாவதியாகிவிடுவார். அவரை வழிநடத்த, இளமையான, சிறந்த மற்றும் அதிக ஆர்வம் கொண்ட நபர்கள் வருவார்கள். பாஜவில் இருந்து விலகிய எனது முடிவு தனிப்பட்ட லட்சியத்தால் எடுக்கப்படவில்லை. மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியல் கலாசாரம் தேவை என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டது.
நட்பாக இருக்காது
நான் தொடர்ந்து ஒரு தீவிர தேசியவாதியாக இருக்கிறேன். நான் நாட்டின் ஒற்றுமையை நம்புகிறேன். அனைத்து மாநிலங்களும் தங்களின் லட்சியத்தை அடையப் போட்டியிட வேண்டும் என்றும் நான் நம்புகிறேன். பாஜவில், தமிழகத்துக்கான அரசியல் முடிவுகள் டில்லியில் எடுக்கப்படுவதாகத் தமிழ் மக்கள் உணர்கிறார்கள். அது ஒரு நல்ல அரசியல் என்று நான் நினைக்கவில்லை. பாஜ தலைவர்களுடன் எனது உறவுகள் நாகரிகமாகத் தொடரும், ஆனால் நட்பாக இருக்காது.
அரசியல் யதார்த்தங்கள்
பாஜ உள்ளிட்ட தேசிய கட்சிகள், தமிழக மக்களுக்கான அரசியலை செய்வதில்லை.
பாஜவில் இருந்து விலகல் ஒரு திடீர் முடிவின் அடிப்படையில் அமைந்ததல்ல. அந்த எண்ணம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மனதில் முளைவிட்டுக் கொண்டிருந்தது. அதிமுகவைப் பொறுத்தவரை, மாறிவரும் அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப கட்சி தன்னை மாற்றிக்கொள்ளத் தவறிவிட்டது. அரசியல் மாறிவிட்டது, அரசியல் கட்சிகளும் மாற வேண்டும், இல்லையெனில் அவை அழிந்துவிடும்.
பாஜவுக்குள் அண்ணாமலை எப்போதுமே அண்ணாமலையாகத் தான் இருந்தார் என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். கட்சி எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. நானும் ஒரு காரியகர்த்தாவாக என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட்டேன் என்று நான் கருதுகிறேன். நான் முதலில் ஒரு இந்தியன். ஆனால், ஒரு தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீ த லீடர்ஸ் அமைப்பு, பாரம்பரிய அரசியல் அமைப்புகளைப் போலன்றி இருக்கும்.
50 லட்சம்
இந்த இயக்கத்தில் பதவிக்கால வரம்புகள், வயது வரம்புகள் மற்றும் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறை ஆகியவை பின்பற்றப்படும். இந்த இயக்கம் தற்போது தேர்தல் அரசியலை விட, உறுப்பினர் சேர்க்கை, குடிமைசார் பிரச்சாரங்கள் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தி வருகிறது. வீ த லீடர்ஸ் தற்போது சுமார் 19 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; ஒரு அரசியல் கட்சியாக மாறுவது குறித்து பரிசீலிப்பதற்கு முன், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இடைத்தேர்தல்கள் எங்கள் களம் அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
முதலில் வி தி லீடர்ஸ் என்பதை தமிழில் மொழி மாற்றம் செய்யுங்கள். நாம் தலைவர்கள் என்பதே ஒரு திமிரு பிடித்த மாதிரி இருக்கிறது. தமிழ் சேவகர்கள் ..
தமிழ் மக்கள் புறக்கணித்து விட்டனர் .
இரண்டு வருடங்களுக்கு முன்பே தனக்குள் முடிவெடுத்து விட்டு பெயரளவிற்கு பா.ஜவில் பயணம் செய்திருக்கிறார். மோடியுடன் அருகில் அமர்ந்து பொய்யாக உறவாடி உள்ளார். இப்பவும் பா.ஜ, அ.தி.மு.கவை மட்டுமே விமர்சித்து கருத்து தெரிவித்துள்ள அவர் தி.மு.க மீதான விமர்சனக் கருத்தை கூறாதது ஏன்? இப்பவும் அ.தி.மு.க ஒரு கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்று அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது என்பதை ஏனோ வசதியாக மறந்து விட்டார்.
நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. எந்த தேசீயக் கட்சியும் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு முரண்பட்ட கொள்கை நிலைப்பாடுகளை எடுக்க முடியாது. நகைப்புக்குள்ளாகி விடும். பிஜெபி தலைமை நல்ல முடிவுகளை எடுத்து சிறப்பான திட்டங்கள், சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் அவற்றை தவறான நேரத்தில் எடுப்பதால் தமிழக பிஜெபி க்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆனால் ஒட்டு மொத்த நாட்டுக்கும் உகந்த முகூர்த்தநாள் நேரம் பார்த்து செயல்பட முடியாது. தமிழகத்தை விட வங்கத்தில் வெற்றிவாய்ப்பு அதிகமாக இருந்ததால் அங்கு கவனம் செலுத்தி தமிழகத்தை இழந்தது என்பதே உண்மை.
அருமயான பதிவு திரு ஆரூர் அண்ணா
மாநில லட்சியம் மாறுபடுகிறது. தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநில கட்சி நிர்வாகம் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் செய்ய இரட்டை ஆட்சி முறை விரும்புகிறது. மாவட்டம், உள்ளாட்சி அமைப்புகள் மாநில நிர்வாகம் அடக்க விரும்புவது. மத்திய அரசின் கீழ் மட்டும் அடங்க மறுப்பது. கன்னியாகுமரி முடிவு சென்னையில் எடுக்கும் போது தமிழக முடிவு டெல்லியில் எடுப்பதில் என்ன தவறு.? தேவை சரியான முடிவு. கட்சி பெயர், சின்னம் மக்களை எளிதில் சென்று அடைய வேண்டும். அதிகார துஷ்பிரயோக அரசியல் கட்சிகளை அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்கள் மாற விட மாட்டார்கள்.