திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன்; வைகோ குற்றச்சாட்டு
சென்னை: திமுக ஆட்சியில் இருந்த கமிஷன், கட்டிங், கரப்ஷன் இருந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள். திமுக ஆட்சியில் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரேட் என கமிஷன் வசூலிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்த கமிஷன், கட்டிங், கரப்ஷனை இந்த ஆட்சியில் ஒழித்துவிட்டார்கள்.
திமுக கூட்டணியில் தான் இருந்தேன். கூட்டணியில் இருந்து கொண்டு அது பற்றி பேசுவது அயோக்கிய தனம். கூட்டணிக்குள் இருந்து கொண்டு கூட்டணியை அட்டாக் பண்ணி பேசுவது என்ன அரசியல் தர்மம்? கூட்டணி தர்மத்திற்காக பேசாமல் இருந்தேன், அதுதான் சரியான அணுகுமுறை.
ஒரு கட்சி கூட்டணிக்குள் இருந்து கொண்டு அவர்களை கண்டித்து பேசுவது நாகரிகமா? நீங்கள் எத்தனை கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். ஒரு மணி நேரம் வேண்டுமானாலும் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.
@block_P@
திமுக ஆட்சியில் இருந்த கமிஷன், கட்டிங், கரப்ஷன் இருந்ததாக குற்றம்சாட்டிய வைகோவிடம் நிருபர் ஒருவர், ''அப்போது ஏன் கேட்கவில்லை'' கேள்வி எழுப்பினார்.
இதற்கு கடும் கோபம் அடைந்த வைகோ, நீங்கள் திட்டமிட்டு வந்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் என்றார்.
பிறகு, அந்த நிருபரிடம், ''உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
திட்டமிட்டு வந்து இருக்கிறீர்கள், உங்களை யார் ஏவி விட்டது.
குழப்பம் செய்வதற்கு வந்து இருக்கிறீர்கள், இங்கே உங்களுக்கு வேலை கிடையாது, வெளியே போங்க''என வைகோ கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கேள்வி கேட்ட நிருபருடன் சண்டை போட்ட வைகோ; செய்தியாளர் சந்திப்பு தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Vaiko ji , Your understanding is understood . Now you need to ask your only son to resign from parliament since he was elected by these corrupt DMK . It is the right way to protect Alliance logic
இதற்க்கு முன் திமுகவிலிருந்து பிரியும்போது இதைவிட பவருடன் பலமடங்கு சாடினார் . பின்பு சேர்ந்துகொண்டார்.
இதை தேர்தலுக்கு முன்னரே கூறியிருக்கலாம் . த வெ க வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டுருக்கலாம் . அதையெல்லாம் யார் தடுத்தது ?. அரசை அரசு பதவிகள் அமைச்சர்களை கூறுபோட்டு விற்கும் வெட்டிக்கலக கும்பல் இப்போது இவருக்கு பதவி ஆசை காட்டிவிட்டார்கள், அதனால் ஓடுகிறார் . ஒரு காலிக்கும்பலை வெட்டிக்கும்பலை ஆதரிக்கிறார்.
இத்தனை காலம் கொள்ளை கூட்டத்தின் கூட்டணியில் இருந்து விட்டு, கொள்ளையடித்ததில் தானும் தனது பங்கை வாங்கிக்கொண்டு, மௌனம் காத்து, இன்று சொல்கிறார் அது தான் கூட்டணி தர்மம் என்று. இதில் தர்மம் எங்கே இருக்கிறது? முழுக்க முழுக்க அதர்மம் தானே? இவரல்லவோ மானுட உருவத்தில் இருக்கும் பச்சோந்தி.
எப்போ அவிங்க அயோக்கியதனம் பண்றங்குனு தெரிஞ்சுதோ … நீங்க ஏன் கூட்டணியை விட்டு வெளியேறல? .. .. தீம்க பதவி இழந்தபின் .. இப்டி பேசுவது அயோக்கியத்தனமா தெரில??? இதுக்கு பேசாம .. எங்காவது ஊருக்கு போய்டாலாமல ??
பழைய காலத்தில் இந்தியாவை கொள்ளையடிக்க பிரெஞ்சு கிழக்கு இந்தியா கம்பெனிகளுக்கும் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியாகம்பெனிகளுக்கும் நடந்த சன்டைகள் போல் தொழிற்சாலைகள் கட்ட கமிஷன் வாங்கும் ஏஜெண்டுகளுக்கும் தொழிற்சாலைகளை மூட கமிஷன் வாங்கும் ஏஜெண்டுகளுக்கும் நடக்கும் சண்டை என்று பலர் பேசிக்கொள்கிறார்கள் மேலும் இரு ஏஜெண்டுகளுக்குமே தோல்வி கிடையாது இருவருக்கும் ஆதாயம் தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும் அந்தக்கால ராஜாக்கள் போல் இருவரிடம் இருந்து ஆதாயம் கிடைக்கும் ஆனால் மக்களுக்குத்தான் தோல்வி என்றும் பலர் பேசிக்கொள்கிறார்கள்.
மானங்கெட்டவனே. திமுக கூட 9 வருடம் இருந்து ஸ்டாலிடனை கட்டிப்பிடித்து உறவாடும் போது திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் தெரியலையா..? நீ பரம யோக்கியனென்றால் அப்போதே வெளியேறியிருக்க வேண்டும். இன்று வெளியேறி விட்டாய். வாயை மூடிக்கொண்டு பேசாமல் போய் தவெகவில் ஓட்டிக்கொள்.
திருடர்களுடன் கூட்டு சேர்ந்து 9 வருடம் உறவாடிவிட்டு வெளியில் வந்தவுடன் யோக்கிய்ன் வேடம் போடுகிறார்.
திருடனுக்கு துணை போனாலும் திருட்டு தான் . திருட்டை மறைத்தாலும் திருட்டுதான். கூட்டணி தர்மைத்தை காக்மனசாட்சியை கொன்று .. தர்மம் காத்து என்ன பயன்?. காசு பார்ப்பது மட்டுமே உங்கள் தர்மம் என்பது மக்கள் நன்கு அறிவர்
திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் வைகோ குற்றச்சாட்டு - சபாஷ் - அப்படியானால் கூட்டணி தர்மம் என்றால் கூட்டணி தலைமை எத்தனை ஊழல் செய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் ,திமுக ஆட்சியில் சமூக நீதி ,சமத்துவம் ,மதச்சார்பின்மை என பெருமிதமாக பாராட்ட வேண்டியது .திமுகவின் கொத்தடிமை கட்டப்பாவாக பிஜேபி எதிர்ப்பு ,சனாதன எதிர்ப்பு ,மனுஸ்ருதி எதிர்ப்பு ,வருணாசிரம எதிர்ப்பு என கூவ வேண்டியது .இப்படி ஊழலை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பெயர் தான் கூட்டணி தர்மம் என்றால் அத்தகைய தர்மத்தை உதறிவிட்டு மோடிஜியின் கரங்களை வைகோ வலுப்படுத்தலாம் .