மண் கடத்திய லாரி பறிமுதல்

கடமலைக்குண்டு:கண்டமனூர் எஸ்.ஐ.,பாஸ்கரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். கணேசபுரம் எல்லை கோவில் அருகே சென்ற டிப்பர் லாரியை நிறுத்த முயன்றனர். டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்று அருகில் இருந்த ஒத்தையடி பாதையில் நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார். அந்த லாரியில் மூன்று யூனிட் ஓடை மண் அனுமதி சீட்டு இன்றி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வாகன உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement