கறுப்பு பேட்ஜ் அணிந்த தோட்டக்கலை அலுவலர்கள்

வாடிப்பட்டி: தி.மு.க., ஆட்சியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற அரசாணை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒரு உதவி வேளாண் அலுவலர் அல்லது ஒரு உதவி தோட்டக்கலை துறை அலுவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தோட்டக்கலை, வேளாண்மை துறை, மார்க்கெட்டிங், வேளாண் பொறியியல் துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது நடைமுறையில் சாத்தியமில்லாதது, பணிச்சுமை அதிகமாகும் என தோட்டக்கலை துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசாணையை த.வெ.க., அரசு ரத்து செய்ய வலியுறுத்தி அலங்காநல்லுார், வாடிப்பட்டி தோட்டக்கலை துறை அலுவலர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.

Advertisement