திமுக முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
சென்னை: கரூரில், சாலையே போடாமல், 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, வழக்குப்பதிவு செய்து திமுக முன்னாள் அமைச்சர் வேலு உள்ளிட்ட 11 பேர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில், 2021 முதல் 2026 வரை நடந்த, தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் வேலு. தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறையில், சாலை அமைக்காமலே, பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அறப்போர் இயக்கம், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில், கடந்த 2022ம் ஆண்டு புகார் அளித்தது.
தி.மு.க., ஆட்சி நடந்ததால், இப்புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது த.வெ.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், வேலு மற்றும் அரசு அதிகாரிகளான பொறியாளர்கள் ஒன்பது பேர் மீதும், கரூரை சேர்ந்தவரும், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பருமான, ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மீதும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அரசிடம் ஒப்புதல் பெற்றனர்.
அதன் அடிப்படையில் கரூரில், சாலையே போடாமல், 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு உள்ளிட்ட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 25 ம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் ஏழு, திண்டுக்கல்லில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் ஒன்று என, 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஆனால், இதனை வேலு மறுத்து இருந்தார்.
இந்நிலையில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
எதுக்கும் அஞ்சாதவன். சீக்கிரம் உள்ளே அனுப்புங்கள்.
இவர் தனது திருவண்ணாமலை இருக்கிற அருண் இன்ஜினிரிங் கல்லூரியின் வளர்ச்சிக்கு பன்மடங்கு உதவி உள்ளார் மக்களின் பணத்தில் சாலைகள் போடாமல் இவர் தனது சொந்த கல்லூரியின் வளர்ச்சிக்கே மக்கள் பணத்தை முழுதும் பயப்படுத்தியள்ளார் இதை சி.பி.யை, க்கொண்டுதான் முழுதும் விசாரித்தால் உண்மைகள் எல்லாமே வெளிவரும்
உடனே சிறை செல்ல பேராறா என்ன இரண்டு தேர்தல் முடியனும்
அப்ப பாத்துக்கலாம்
யுவர் ஆனர் இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு .இந்த அளவுக்கு குறைவாக மதிப்பிடக்கூடிய நபர் நான் அல்ல .
ஒருவேளை நான் அள்ளியதில் சிந்தியதை பொருக்கி எடுத்த என்னுடைய தொழிலாளர்கள் யாருடையதாவது இருக்கலாம் .3.23ஆயிரம் கோடிகளாக இருந்தால் சொல்லுங்கள் .அதுதான் என்னுடைய தகுதி .
இவரை மாட்டி விட்டதே தீயமுக முக்கிய நபர் என்ற பேச்சும் அடிபடுகிறது
முக்கியமாக இந்த தீய சக்தி dmk வில் குறிப்பாக வேலு/nehru இந்த இருவருமே மலை முழிங்கி மஹதேவனுங்க. இவானுங்கலின் 5 வருட ஆட்டங்கள் என்ண என்ன வென்று லிஸ்ட் போட்டு என்ன விதமான பணிகள் செய்தர்கள் இந்த ரெண்டு தொங்கணுங்க பார்த்து கணக்கீடு செயுது . இவனுங்க accountuku எவ்வளவு போச்சுன்னு ஒரு சிறந்த ஆடிட்டர் வைத்து கணக்கிட்டாலே இவனுங்க கதை முடிந்தது. இவனுங்களை சர்வ சதார்னமாக வெளியில் விட்டால் விஜய் ஆட்சிக்கே ஆபத்தில் முடியும்.
இந்தக் கொம்பனாலும் இவரை ஒன்றும் செய்ய முடியாது
இவரெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது. நல்லா இருப்பார். ஈ வாடு அடுத்தடுத்த சமனுக்காக ஆவலோடு காத்திருப்பவர்.
பழம் தின்று கொட்டை போட்டவன்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் . நீதித்துறையின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள். மண் திருடன் முடி கேஸ் என்னவாயிற்று . அது போல தான் இதுவும். சாதாரண நடத்துனர் கோடிகளில் சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது கேஸ் போட்டு என்ன புண்ணியம் .பணத்தால் அடித்து தப்பித்து விடுவான்
ஐயா இவர் சாதாரண சைகிள்ளுக்கு பஞ்சர் போடுவாராக இருந்தார் எனதான் கூறுகிறார்கள்.மேலும்
-
அணைகள் நீர் மட்டம்
-
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
-
அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு: ஜூலை 3ல் அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு சிறப்புரை
-
மேகதாது அணைக்கு எதிர்ப்பு; பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவங்கினார் அன்புமணி
-
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; தர்மபுரி அக்சிதா முதலிடம்
-
இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா