புதிதாக நியமிக்கப்பட்ட கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில்,
புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு, 2வது நாளாக பயிற்சி வழங்கப்பட்டது.
தவிர, கூட்டுறவு வார விழாவின், 3ம் நாளான நேற்று ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பம் குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
சித்தோடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், மண்டல இணை பதிவாளர் கந்தராஜா தலைமையில் பயிற்சி வழங்கினர்.
பேராசிரியர் பிரசாந்த், ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கினார்.
துணை பதிவாளர்கள் பரிமளா, மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement