வெள்ளகோவிலில் 7வது ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது
வெள்ளகோவில், ஜூலை 4–
மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 7-வது ஆண்டு, புத்தக திருவிழா நேற்று துவங்கியது. வரும் 7ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
வெள்ளகோவில், ஆர்.பி.எஸ், மஹாலில், காங்கயம் எம்.எல்.ஏ. நடராஜன் துவக்கி வைத்தார். சுவாமி பீட்ஸ் முத்துசாமி புத்தக விற்பனையைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புத்தக கண்காட்சி வரும், 7ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை, 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும். கண்காட்சியில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில், பல்லாயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
தினமும் மாலை 6:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு தலைப்புகளில் சிறப்ப பேச்சாளர்கள் பேசுகின்றனர். புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த ஐந்து நாள் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது