மூதாட்டி மாயம்

நெட்டப்பாக்கம்: மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மடுகரை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயா, 90. இவர் கடந்த 2017ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்களின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மகள் செல்வி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement