வேலைக்கு பணம் கொடுக்காதீங்க: தபால் துறை எச்சரிக்கை

சென்னை: 'தபால் துறையில் வேலை எனக்கூறி, பணம் கேட்கும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்' என, மத்திய தபால் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, தபால் துறையின் தமிழக வட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தபால் துறையின் தமிழக வட்டத்தின் பெயரில், போலியான பணி நியமன ஆணைகளும், ஆள்சேர்ப்பும் நடப்பதாக தெரிகிறது. பணி நியமன உத்தரவுகளை வழங்கவோ அல்லது ஆள்சேர்ப்புக்கோ எந்தவித கட்டணத்தையோ, ஆதாயத்தையோ தபால் துறை கோருவதில்லை. அவ்வாறு யாராவது கூறினால், மோசடி பேர்வழிகள் என்பதை உணர வேண்டும்.

அவ்வாறான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாமல், அவர்கள் குறித்த விபரங்களை தபால் துறை மற்றும் காவல் துறையிடம் புகாராக அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்தால், அதற்கு தபால் துறை பொறுப்பேற்காது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement